Tuesday, February 10, 2009

சர்தார்ஜி ஜோக்ஸ் 3

சர்தார்ஜி புது மாருதி ஒன்றை வாங்கினார். அதனை எடுத்துக் கொண்டு அமிர்தசரசில் இருந்து ஜலந்தருக்கு தனது நண்பனைக் காணச் சென்றார். சிலமணி நேரங்களிலேயே நண்பரின் வீட்டை அடைந்த சர்தார் தன் நண்பரின் வீட்டிலேயே தங்கி சில நாட்கள் ஊரினைச் சுற்றிப்பார்த்தார். வீட்டுக்கு திரும்புவதாக முடிவெடுத்த சர்தார் தன் அம்மாவுக்கு தொலைபேசி செய்து இன்னும் சில மணிநேரங்களில் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று கூறினார்.சிலமணிநேரங்கள் என்று சொன்ன சர்தார் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. அவரின் தாய் பதறினார். மூன்றாவது நாள் வீடு திரும்பிய சர்தாரைக் கட்டிக்கொண்டு அழுத அவரின் அம்மா,”என்னடா ஆச்சு? ஏன் காலதாமதம்?” மிகவும் களைப்படைந்து போயிருந்த சர்தார் சொன்னார்,” மாருதி தயாரித்தவர்களுக்கு மூளையே இல்லைம்மா..முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சவங்க..ரிட்டர்ன் ஆகறதுக்கு ஒரே ஒரு கியர்தான் வச்சிருக்காங்க!”
--------------------
ரயில் ஒன்று அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. திடீரென பலமுறை ஓடுபாதையில் இருந்து விலகுவதுபோலக் குலுங்கி பின்னர் நேராகச் சென்றது. இச்செய்திக் கேள்விப்பட்ட மேலதிகாரிகள் ஓட்டுநரைக் கைது செய்ய அடுத்த நிறுத்தத்தில் காத்திருந்தனர். ரயில் நின்றதும் ஓட்டுநரைப் பார்த்தால்..அட..நம்ம சர்தார்!மேலதிகாரி கேட்டார்,” ஏன் அப்படி ரயிலை செலுத்தினாய்?’ “மன்னிக்கவும்..பலமுறை நான் ஒலி எழுப்பியும் ஒரு ஆள் தண்டவாளத்தில் இருந்து நகரவே இல்லை! “ “உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு? ஒரே ஒரு ஆள்தானே விட்டு ஏத்திட்டு வரவேண்டியதுதானே..ரயில் புரண்டிருந்தா என்ன பன்றது? உன்னோட செய்கையால இவ்வளவு பயணிகளைக் கொல்லப் பார்த்தியே?” “சாரியா சொன்னீங்க சார்.. நானும் அவன் மேல வண்டிய ஏத்த நினைச்சுதான் ஓட்டினேன். ஆனா அந்த முட்டாள் தண்டவாளத்துல வளைஞ்சு வளைஞ்சு ஓடினான்!”
-------------------------
மக்கள் தொகை கட்டுப்பாடு பற்றிய கூட்டத்தில் ஒரு பேச்சாளர் உணர்ச்சிபூர்வமாக பேசினார்,இந்தியாவில் ஒவ்வொரு 10 நொடிக்கும் ஒரு பெண் குழந்தை பெற்று, மக்கள் தொகை கூடுகிறது.உடனே ஒரு சர்தார்ஜி உணர்ச்சிவசப்பட்டு “அப்பேர் பட்டவர்களை உடனே கண்டுபிடித்து இந்த செயலை தடுக்க வேண்டும்” என்றாரே பார்க்கலாம்.
-------------------

சர்தார்ஜி: நேற்று ரெயிலில் என்னால் சரியாக தூங்க முடியவில்லை.நண்பர்: ஏன்சர்தார்ஜி: எனக்கு அப்பர் பெர்த் தான் கிடைத்தது.நண்பர்: நீ ஏன் கிழே இருப்பர்களிடம் பேசி மாற்றியிருக்கக்கூடாது?சர்தார்ஜி: நான் இரவு முழுவதும் விழித்திருந்து கீழ் பெர்த்திற்கு யாராவது வருவார்கள், வந்தால் கேட்கலாம் என்று இருந்தேன், யாருமே வரவில்லை.நண்பர்: ????@@@@@@#####
--------------------------

ஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்!அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று!அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.அதற்கு அந்த சர்தார்ஜி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்."அப்படியென்ன தவறு" என்று நிருபர்கள் கேட்டதற்கு சர்தார்ஜி சொன்னார்."எல்லோரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்களும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.அதற்கு அந்த புத்திசாலி சர்தார் "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.
------------------
ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கேப்டனிடம் இருந்து அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பதறியடித்து பயத்தோடு அவரவர் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, “என்னாங்க... எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?” என்று கேட்டார்.“நான் சாகப் போறதில்லே... நம்ம பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்...” என்றார் சர்தார்ஜிபக்கத்து சீட்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. “எப்படி? என்னா சொல்றீங்க நீங்க?” என்றார்.“உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!” என்று சிரித்தார் சர்தார்ஜி.
-------------------------------
சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப் ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்..பஸ் ஸ்டாப் ல நிக்காம தள்ளி போய் நிக்குது, சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்..... கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..சர் அடுத்த ஸ்டாப் ல பிடிச்சிரலாம்னு ஒடுறார், அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார். வந்தவர் வீட்ல மனைவிகிட்ட எல்ல கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.கேட்ட சர்தாரிணி மனைவிக்கு ரெம்ப கோபம், என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு...........
--------------------------------------
இங்கிருந்து குதிச்ச்டுவேன்".மதராஸி பாக்ஸ்ஐ திறக்க அவனுக்கும் இட்லிகடுப்பாகி " நாளைக்கு இட்லி இருந்தா நானும் குதிச்சுடுவேன்"னான்அடுத்தது சர்தார் திறக்க அதுலயும் இட்லி, " அவரும் நாளைக்கு இட்லி இருந்தா நானும் குதிச்சுடுவேன்"ன்னார்மறு நாள்பெங்களூரி டிபன் பாக்ஸ் திறந்தா அதே இட்லிமறு பேச்சு பேசலை எட்டாவது மாடிலேர்ந்து குதிச்சிட்டார்மதராஸி பயத்தோட திறக்க அங்கயும் இட்லிஅவரும் குதிச்சிட்டார்சர்தார்ஜி திறக்க மறுபடியும் இட்லிஅவரும் குதிச்சிடறார்எழவு அன்னைக்கு மூணு பேர் மனைவிகளும் சந்திச்சிக்கிறாங்கமதராஸி மனைவி ,"அய்யய்யோ இப்டி பண்ணிட்டீங்களே உங்களுக்கு பிடிக்கலைனா செஞ்சிருக்கவே மாட்டேனே"பெங்களூரி மனைவி ,"ஆமாங்க ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்க கூடாதா தோசை தந்திருப்பனே"சர்தார்ஜி மனைவி ,"அய்யய்யோ எனக்கு ஒண்ணுமே புரியலயே அன்னைக்கு நீங்க தானே சமைச்சீங்க"
-------------------------

வக்கீல்: உங்க பிறந்த தேதி என்ன?சர்தார்ஜி: ஜூலை 15வக்கீல்: எந்த வருஷம்?சர்தார்ஜி: ஒவ்வொரு வருஷமும்!வக்கீல்: ...! ...! ...!

----
சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.“அடியேய்... நானும், நீயும் அமெரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி.அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.அதற்கு சர்தார்ஜி, “என்னடி தெரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!

-----------------------
இரண்டு சர்தார்ஜிக்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.இடைவேளையின் போது ஹீரோ ஒரு கட்டிடத்தின் மேல் குதிப்பது போல் நிற்கிறான்.நம்ம 2 சர்தார்களும் பந்தயம் கட்டினர்.முதலாமவர் : ஹீரோ கட்டத்தில் இருந்து குதித்து இறந்து போவான் 100 ரூபாய் பந்தயம்.இரண்டாமவர் : குதிக்க மாட்டான் 100 ரூபாய் பந்தயம்இடைவேளை முடிந்து படம் தொடங்கியது ஹீரோ குதித்து இறந்துவிட்டான்.முதலாமவர் : நான் உன்கிட்ட உண்மைய மறைச்சுட்டேன் நான் ஏற்கனவே படம் பார்த்துவிட்டேன்இரண்டாமவர்:நானும் நேற்றே பார்த்துட்டேன் நேத்து தான் குதிச்சு செத்து போனவன் இன்னைக்கு திரும்பவுமா அப்படி பன்னபோறானு நினைச்சேன்.
------------------------
ஒரு நாள் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து ஒரு புலி தப்பி ஓடிவிட்டது. அந்த புலியை பிடிக்கும் பொறுப்பு சர்தார்ஜி ஒருவரிடம் தரப்பட்டது. புலியைப் பிடிக்க சர்தார்ஜி ஜீப்பில் கிளம்பினார். அடர்ந்த மலைச் சாலைகளில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது தப்பித்த புலி ரோட்டுக்கு வந்து, சர்தார்ஜியின் ஜீப்பைத் துரத்தத் தொடங்கியது. பயத்தில் சர்தார்ஜி வேகமாக ஜீப்பை ஓட்டினார். புலி மிகவும் பக்கத்தில் வந்துவிட்டதை பார்த்தார் சர்தார்ஜி. அப்போது ரோடு இடது புறமாகவும், வலது புறமாகவும் இரண்டாகப் பிரிந்தது.ஜீப் வலது புறமாக திரும்பப் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, ஜீப்பை இடது புறமாக ஓட்டி சென்றுவிட்டார் சர்தார்ஜி. புலியும் அவர் எதிர்பார்த்ததுபோல் வலது புறமாகத் திரும்பி ஓடியது. ஆனால் மீண்டும் ரோடு ஒரு இடத்தில் ஒன்றாக சேர்ந்தது. இப்போது புலி ஜீப்பை தொட்டு விடும் தூரத்தில் இருந்தது. ஆனால் மீண்டும் ரோடு இரண்டாக பிரிந்தது. இப்போது சர்தார்ஜி இடது புறம் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, வலது புறமாக ஜீப்பை ஓட்டிச் சென்றுவிட்டார். புலி வலது புறமாக சென்றுவிட்டது.சர்தார்ஜியின் துரதிஷ்டம், ரோடு மீண்டும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தது. ஆனால் ரோடு வெகு தூரத்துக்கு பிரியவே இல்லை. புலி ஒரே பாய்ச்சலில் ஜீப்பில் ஏறும் நிலையில் இருந்தது. இப்போது சர்தார்ஜி ஓவர்டேக் சிக்னல் காண்பிக்க, புலி சர்தார்ஜியின் ஜீப்பை ஓவர்டேக் செய்து கொண்டு வேகமாக சென்றுவிட்டது.இதிலிருந்து என்ன தெரிகிறது?
------------------------
ஒரு சர்தார்ஜிக்கு இடக்கை துண்டாகி விட்டது.ஒரே கையோடு போய்க் கொண்டிருந்தார்.அவரைப்பார்த்த அவர் நண்பர் "என்ன பல்பீர்?எப்படி இப்படி ஆச்சு? என்று கேட்டார்."பேக்டரியில் வேலை செய்தபோது மிஷின் கையை வெட்டி விட்டது" என்றார் பல்பீர்."நல்லவேளை.இடக்கை போனது.வலக்கை போயிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பாய்!" என்றார் அந்த நண்பர்"வலக்கை தான் துண்டாக இருந்தது. நான் கடைசி நிமிடத்தில் மிஷின் இறங்குவதை கவனித்து வலக்கையை எடுத்து விட்டு இடது கையை வைத்தேன்." என பெருமையுடன் சொன்னார் பல்பீர்!!!
---------------------
ஒரு நேர்காணலில் Mr.சர்தார்ஜிகேள்வி கேட்பவர்: மின்சார மோட்டார் எப்படி வேலை செய்கிறது?சர்தார்: டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கேள்வி கேட்டவர் (கத்தியபடி): நிறுத்து.சர்தார்: டுர் டுப் டுப் டுப் டுப்.
----------------------
புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.விமானி சொன்னது இதுதான்:“நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன
--------------------------------
சர்தார்: என்னடா ரொம்ப சோகமா இருக்க?நண்பர்: எவனோ பூட்டை உடைச்சி 50,000 திருடிட்டு போயிட்டான்சர்தார்: பூட்டுக்குள்ள ஏண்டா 50,000 ஒளிச்சி வச்ச?
---------------
சர்தார்ஜி ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. உறவினர், நண்பர்களுக்கு அவர் திருமண அழைப்பிதழ் அனுப்பினார். வெளிïரில் உள்ள நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் ஒரு கடிதத்துடன் அழைப்பிதழை இணைத்து அனுப்பினார். கடிதத்தில், திருமணத்திற்கு கட்டாயம் வரவும் என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால், நண்பரானவர் சர்தார்ஜியின் திருமணத்திற்கு வரவில்லை. இதனால் நண்பர் மீது கோபம் கொண்டார் சர்தார்ஜி.ஒரு நாள் அதே நண்பனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது சர்தார்ஜிக்கு. அப்போது திருமணத்திற்கு ஏன் வரவில்லை என்று கேட்டு ஒரு பிடிபிடித்தார்.நண்பரோ, தனக்கு திருமண அழைப்பிதழே வரவில்லை என்றும், கிடைத்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பேன் என்றும் கூறினார்.அதற்கு சர்தார்ஜியோ, `அது எப்படி! நான் தானே, அழைப்பிதழ் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் திருமணத்திற்கு அவசியம் வர வேண்டும் என்று கடிதத்தில் எழுதி இருந்தேன்! கடிதம் கிடைக்கா விட்டாலும் வந்திருக்க வேண்டியது தானே' என்றார்.
---------------------
ரயிலில் டிக்கட் பரிசோதகர் வந்து டிக்கட் கேட்டார்.தேடித் தேடிப் பார்த்த சர்தார்ஜியிடம் இல்லை.டிக்கட் பரிசோதகர் "சரி பரவாயில்லை. நீங்க டிக்கட் வாங்கியிருக்கீங்கன்னு நம்புறேன்" என்றார்.சர்தார்ஜி, "ஐய்யோ! நான் எங்கே இறங்குவது என்று டிக்கெட்டில் தானே இருக்கு!" என்றார்.
---------------------------------
நான்கு சர்தார்ஜிக்கள் சேர்ந்து வியாபாரம் துவங்க நினைத்தனர். பணம் முதலீடு செய்து விட்டனர்.முதலில் ஓட்டல் தொழில் துவங்கினர். மூன்று நாட்கள் பார்த்தனர். யாருமே அவர்கள் ஓட்டலுக்கு வரவில்லை.காரணம்: "பொதுமக்களுக்கு அனுமதியில்லை" என்னும் போர்டு முன்னால் இருந்தது!சரியென்று ஒரு மெக்கானிக் ஷாப் துவங்கினர். அதற்கும் மூன்று நாட்களாக யாரும் வரவில்லை.காரணம்: மெக்கானிக் ஷாப் இரண்டாவது மாடியில் இருந்தது!அதுவும் போதாதென்று, டாக்ஸி வாங்கினர். அதற்கும் அதே கதி தான். மூன்று நாட்களாக ஒரு சவாரியும் இல்லை.காரணம்: 4 சர்தார்ஜிக்களும் டாக்ஸியில் உட்கார்ந்திருந்தனர்!கோபத்தில் அந்த டாக்ஸியை மலை உச்சியில் தள்ளி விடலாம் என்று முடிவு செய்தனர். அதுவும் அவர்களால் முடியவில்லை.காரணம்: இருவர் முன்புறம் இருந்து தள்ள, இருவர் பின்புறம் இருந்து தள்ளிக் கொண்டிருந்தனர்!
----------------------
சர்தார் ஒரு டாக்டர்கிட்டே வந்து.." டாக்டர்.. தேனீ கொட்டிடுச்சி...!"" கவலைப்படாதே.. "அது" மேலே மருந்து போட்டு விடறேன்.."" "அது" இன்னேரம் எங்கே பறந்து போச்சோ..?""ஹா..ஹா.. கொட்டுன இடத்தைக் காட்டு.. மருந்து போட்டு விடறேன்..""தோட்டத்திலே டாக்டர்.. மரத்துக்கு கீழே.. அங்கே மருந்து போட்டா இங்கே எனக்கு வலி குறையுமா..?""அடேய் கிறுக்கா.. உன்னோட உடம்புல எந்த இடத்துல கொட்டிச்சு..?""ஓ.. அதுவா.. விரல்ல டாக்டர்..! ஆ... ரொம்ப வலிக்குது டாக்டர்.."" எது காட்டு..?"" எதுன்னு எப்படி டாக்டர் சொல்ல முடியும்..? அந்த தேனீ நூத்துக்கணக்குல இருக்குமே..!"
---------------------

0 comments:

Website counter

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP